உள்ளத்து உள்ளது கவிதை-வலையரங்கம்

கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை சார்பாக ‘உள்ளத்து உள்ளது கவிதை ‘ என்ற தலைப்பில் வலையரங்கு நடைபெறுகிறது. இவ்வலையங்கில் கல்லூரியின் தாளாளர், பொறியாளர் P. சிவக்குமார் அவர்கள் தலைமையுரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர்.K.குமாரவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இவ்வலையரங்கில் டாக்டர் என்.ஜி.பி. கல்லூரி, தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர்.கு.செல்வி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இந்நிகழ்ச்சியை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.ஈ.கௌசல்யா அவர்கள் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.